திருநங்கையாக மாறிய மாணவி தான் படித்த பள்ளிக்குச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஆறு பேர் பலியான சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் உள்ள நாஸ்வில்லே பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கிறிஸ்தவ பள்ளியில் இந்தக் கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தரப்படுகிறது. 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். […]