ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை வழிபடுவதற்கும், அவர்களின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கும் மிகவும் முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. தட்சிணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் இது சக்தி வாய்ந்த அமாவாசையாக கருதப்படுகிறது. இந்த நாளில் தர்ப்பணம் மற்றும் பிற சடங்குகளைச் செய்வதன் மூலம், முன்னோர்களின் ஆசீர்வாதங்களைப் பெற்று, வாழ்வில் சுபிட்சம் உண்டாகும். ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை தினத்தில் தர்ப்பணம் செய்வது சிறப்பானது. குறிப்பாக ஆடி அமாவாசை, தை அமாவாசை, […]

மாதந்தோறும் அமாவாசை தினம் வந்தாலும், ஆண்டுதோறும் வருகின்ற ஆடி மாத அமாவாசை, புரட்டாசி மாத மகாளயப்பட்ச அமாவாசை, தை மாத அமாவாசை ஆகிய மூன்று அமாவாசை தினங்கள் பிரசித்தி பெற்றவையாக கருதப்படுகிறது. வழக்கமாக வரும் அமாவாசைகளில், தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க தவறியவர்கள், ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்தால், ஆண்டு முழுவதும் அமாவாசை தினங்களில் முன்னோர்களை வழிபட்ட புண்ணியம் வந்து சேரும் […]