திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படும் கோவில்களில் ஒன்று திருப்பதியில் அமைந்துள்ள கோவிந்தராஜ சுவாமி திருக்கோவில். திருமலையில் குடிகொண்டிருக்கும் வெங்கடேஷ பெருமாளுக்கு அண்ணன் என போற்றப்படுபவர் கோவிந்தராஜ சுவாமி. திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கோவிந்த ராஜ பெருமாளையும், திருச்சானூர் சென்று பத்மாவதி தாயாரையும் தரிசத்த பிறகே திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்பார்கள். பத்மாவதி தாயார் மற்றும் கோவிந்த ராஜ பெருமாளிடம் நம்முடைய வேண்டுதல்களை கூறி விட்டு, ஏழுமலையானை சென்று […]