சென்னையில் திருமாவளவன் கார் மோதிய விவகாரத்தில் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த பார்கவுன்சில் இணை தலைவர்கள் ஆர்.அருணாசலம், சரவணன் ஆகியோரை கொண்ட சிறப்புக்குழுவை நியமித்து பார்கவுன்சில் உத்தரவு. கடந்த 7-ஆம் தேதி சென்னை உயர் நீதின்றம் அருகே ஓர் ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்று திரும்பியபோது, அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஸ்கூட்டர் ஒன்று திருமாவளவன் சென்ற காருக்கு குறுக்கே வந்துள்ளது. […]