மாநிலப் பேரிடர் மீட்பு நிதியாக ரூ.6,194.40 கோடியை தமிழகம் உள்ளிட்ட 19 மாநிலங்களுக்கு வழங்க மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புதல் அளித்துள்ளார். இதில் தமிழ்நாடு, ஆந்திரா, அருணாச்சலப்பிரதேசம், அசாம், பீகார், கோவா, ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, ஒடிசா, பஞ்சாப், திரிபுரா ஆகிய 15 மாநிலங்களுக்கு 2023-24 நிதியாண்டுக்கான மாநிலப் பேரிடர் மீட்பு நிதியாக ரூ.4,984.80 கோடியை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. […]

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைப்பயணத்தை அமித்ஷா தொடங்கி வைப்பார் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘என்‌ மண்‌; என்‌ மக்கள்‌’என்ற பெயரில்‌, திருச்செந்தூரில்‌ இருந்து ஜூலை 9- ம்‌தேதி நடைபயணத்தை தொடங்க உள்ளார். தூத்துக்குடி மாவட்டம்‌, திருச்செந்தூர்‌ முதல்‌ சென்னை வரை உள்ள 39 நாடாளுமன்றத்‌ தொகுதிகளிலும்‌, ஒருநாளைக்கு 2 சட்டமன்றத்‌ தொகுதிகள்‌ வீதம்‌ 100 நாட்கள்‌ நடைபயணம்‌ செல்லதிட்டம்‌ வகுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிகின்றன. இந்த நடைபயணத்தின் […]

திரிபுராவில் பிப்ரவரி 16-ம் தேதி 60 இடங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கல்லூரிக்கு செல்லும் ஒவ்வொரு பெண்ணுக்கும் பாரதிய ஜனதா கட்சி இலவச ஸ்கூட்டி வழங்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். செபஹிஜாலா மாவட்டத்தில் நடந்த பேரணியில் அவர் பேசுகையில், “திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், கல்லூரி செல்லும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இலவசமாக ஸ்கூட்டி வழங்கப்படும்… காங்கிரசுடன் கூட்டணி வைத்து தேர்தலுக்கு முன்பே, […]

டெல்லியில் இளம் பெண் ஒருவர் கார் மோதி சுமார் 4 கி.மீ தூரம் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கையை கேட்டுள்ளது. புத்தாண்டு இரவில் 20 வயதான இளம்பெண் தனது இருசக்கர வாகனத்தில் வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். நள்ளிரவு நேரத்தில் அவர் வீடு திரும்பிய போது சாலையில் சென்ற ஒரு கார் பெண்ணின் வாகனம் மீது மோதியது. காரில் வந்த 5 பேரும், […]

பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டிற்கு பெயர் பெற்ற ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி மீண்டும் பாஜக மீது கடுமையான விமர்சனங்களை வைக்க தொடங்கியுள்ளார். பாஜக காஷ்மீரி பண்டிட்களை தங்கள் வாக்கு வங்கிக்காக மட்டுமே பயன்படுத்துகிறது என்று கூறினார். பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது, “இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமான அமைப்பாக இல்லாமல் வெறும் […]

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். கோவை, பொள்ளாச்சி, ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டத்தில் பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களின் கடைகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வருகிறது. கடந்த 22 ஆம் தேதி கோவை பாரதிய ஜனதா அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டத்தில் பெட்ரோல் குண்டு வீசப்படும் […]