மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஆண் பெண் இருவரின் சடலமும் ஒரே வீட்டில் காணப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேற்குவங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவிற்கு தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஹரிதேவ்பூரில் காவல் நிலையத்திற்கு வந்த தொலைபேசியையடுத்து அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற காவல்துறை அங்கிருந்த இருவரது சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது. மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது காவல்துறை. […]