ஜம்மு காஷ்மீரின் காந்தர்பல் மாவட்டத்தில் உள்ள சோனாமார்க் சுற்றுலா ரெசார்ட்டில் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு பெரிய பனிச்சரிவு ஏற்பட்டது. இது உள்ளூர் மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையே பீதியை ஏற்படுத்தியது. இருப்பினும், இதுவரை எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த பனிச்சரிவு இரவு 10.12 மணியளவில் ஏற்பட்டது. இந்த காட்சிகள் பல சிசிடிவி கேமராக்களில் பதிவானது. அதன் பரபரப்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன, இது […]

லடாக்கில் உள்ள சியாச்சின் தள முகாமில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட பெரும் பனிச்சரிவில் இரண்டு அக்னிவீரர்கள் உட்பட மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். “உலகின் மிக உயரமான போர்க்களம்” என்று அழைக்கப்படும் சியாச்சினில் மீட்புப் பணி நடந்து வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மஹர் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் குஜராத், உத்தரபிரதேசம் மற்றும் ஜார்க்கண்டைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 மணி நேரம் சிக்கிய பின்னர் அவர்கள் இறந்தனர். ஒரு […]