ஓமன் நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் ஓமன்’ விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. இந்தியா – ஓமன் நட்புறவுக்கான சிறந்த பங்களிப்பு மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைத்துவத்திற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் ஓமன்’ விருதை, ஓமன் மன்னர் ஹைதம் பின் தாரிக் வழங்கினார்.இவ்விருதை இருநாடுகளுக்கு இடையேயான பழங்கால நட்புறவுக்கு அர்ப்பணிப்பதாக பிரதமர் கூறியுள்ளார். இது இந்தியாவின் 1.4 […]
award
மத நல்லிணக்கம், சமுதாய ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக பணியாற்றியவர்கள் “கபீர் புரஸ்கார்” விருது பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழக அரசின் 2026ஆம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. இவ்விருதானது தலா ரூ.20,000/-, ரூ.10,000/- ரூ.5,000/- தகுதியுடையோருக்கு வழங்கப்படுகிறது. தருமபுரி […]
6-வது தேசிய நீர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்திற்கு 4 விருதுகள் கிடைத்துள்ளன. டெல்லியில் உள்ள ஷ்ரம் சக்தி பவனில் மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் சி.ஆர் பாட்டீல், 6-வது தேசிய நீர் விருதுகள் பெறுவோரின் பட்டியலை வெளியிட்டார். 2024-ம் ஆண்டுக்கான இந்த விருதுகள், சிறந்த மாநிலம், சிறந்த மாவட்டம், சிறந்த ஊராட்சி, சிறந்த உள்ளாட்சி அமைப்பு, சிறந்த பள்ளி அல்லது கல்லூரி, சிறந்த தொழிற்சாலை, சிறந்த நீர்நிலைப் பயன்பாட்டாளர் […]
வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற டிசம்பர் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்; வீர, தீர செயல்களுக்கான ‘அண்ணா பதக்கம்’ ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின்போது முதல்வரால் வழங்கப்படுகிறது. பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் (சீருடைப் பணியாளர்கள் உட்பட) இந்த பதக்கங்கள் வழங்கப்படும். விண்ணப்பதாரர் தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம். […]
பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கான பிரதமரின் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம். பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கான பிரதமரின் விருதுகள், 2025 திட்டப் பணிகளை ஆய்வு செய்வதற்காக, நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை செயலாளர் தலைமையில், அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் நிர்வாக சீர்திருத்தங்கள் துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலம் நேற்று ஒரு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மாவட்டங்கள்/ மத்திய மற்றும் மாநில அரசுகளின் […]
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விளையாட்டு விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். விளையாட்டுகளில் சிறந்து விளங்குவோரை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. விளையாட்டுகளில் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கிய விளையாட்டு வீரருக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதும், விளையாட்டில் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை செய்துவரும் விளையாட்டு வீரருக்கு அர்ஜூனா விருதும், விளையாட்டு மேம்பாட்டிற்கு வாழ்நாள் பங்களிப்பை அளித்தவருக்கு அர்ஜூனா விருதும் (வாழ்நாள்) வழங்கப்படுகிறது. சர்வதேச விளையாட்டுகளில் […]
இசைஞானி இளையராஜாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இளையராஜாவின் இசைப்பயணம் மற்றும் அவரது சாதனைகளை பாராட்டி, அவரை கவுரவிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் ‘சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு-50 பாராட்டு விழா’ சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. விழாவில், இளையராஜாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், நினைவுப் பரிசு வழங்கினார். விழாவில் பேசிய அவர்: […]
சமூக முன்னேற்றத்துக்கு பங்காற்றிய பெண் குழந்தைகளுக்கு விருது வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சென்னை மாவட்டத்தில், பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்காக, சிறப்பாக பங்காற்றும் வகையில் செயல் புரிந்த 13 முதல் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜன.24-ம் தேதி) மாநில அரசின் சார்பில், சிறந்த பெண் […]
பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும், பாடுபட்டு வீர தீர செயல் புரிந்து வரும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையில் பெண் குழந்தைகளுக்கான மாநில அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் பெண் குழந்தைகளுக்கு […]
வைக்கம் விருதுக்கு விண்ணப்பங்களை செப்டம்பர் 10-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தலைமைச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி, சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘சமூக நீதிக்காக வைக்கத்தில் போராடிய பெரியாரை நினைவுகூரும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் ‘வைக்கம் விருது’ சமூகநீதி நாளான செப்.17-ம் தேதி அரசால் வழங்கப்படும்’’ என்று […]

