பாபா வாங்காவின் ‘பயங்கரமான கணிப்புகள்’ இஸ்ரேல்-ஈரான் மோதலுக்கு மத்தியில் மீண்டும் எழுந்துள்ளன. சமீபத்திய இராணுவத் தாக்குதல்களுக்குப் பிறகு உலகம் முழுவதும் கவலைகள் அதிகரித்து வருவதால், 2026 இல் ஒரு ‘பெரிய போர்’ பற்றிய கணிப்புகள் யதார்த்தத்தை நோக்கி நகர்கின்றனவா என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். பிப்ரவரி 28 சனிக்கிழமை, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது கூட்டு இராணுவத் தாக்குதலைத் தொடங்கின. தெஹ்ரானில் உள்ள உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் […]

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் மனைவி மன்சௌரே கொஜஸ்தே பகெர்சாதே திங்கட்கிழமை உயிரிழந்ததாக, ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தெஹ்ரானில் நடத்திய தாக்குதலில் காயமடைந்த நிலையில் அவர் இன்று மரணமடைந்துள்ளார். 79 வயதான மன்சூரே கொஜஸ்தே பகெர்சாதே, ஈரானின் மஷ்ஹத் நகரில் பிறந்தவர். அவர், ஈரான் அரசின் ஒளிபரப்பு நிறுவனமானஇஸ்லாமிக் குடியரசு ஈரான் ஒலிபரப்பு நிறுவனத்தில் முன்னாள் துணை இயக்குநராக இருந்த […]

இந்தியா முழுவதும் வன்முறை சம்பவங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சுற்றறிக்கை பிப்ரவரி 28 அன்று அனுப்பப்பட்டுள்ளது. இதில், “ஈரானுக்கு ஆதரவான தீவிரவாத போக்குடைய மதபோதகர்கள் தூண்டுதல் உரைகள் நிகழ்த்துகிறார்களா” என்பதை கண்டறிந்து, மாநில அரசுகளும் பாதுகாப்பு அமைப்புகளும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய […]

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய புரட்சிப் படை (IRGC) தலைமையகத்தை அழித்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த தாக்குதல், அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இந்த தாக்குதல் குறித்து, “பாம்பின் தலையே துண்டிக்கப்பட்டது” என்று அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்க ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் “கடந்த 47 ஆண்டுகளில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிப் படை (IRGC) 1,000-க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களை கொன்றுள்ளது. நேற்று, அமெரிக்கா நடத்திய […]

தன்னை கொலை செய்ய முயன்றதாக ஈரான் பொறுப்பேற்றால், அந்த நாடு “முழுமையாக அழிக்கப்படும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தன்னை குறிவைத்து நடைபெறும் எந்தவொரு கொலை முயற்சிக்கும் இந்த உத்தரவு நேரடியாக பொருந்தும் என்று அவர் தெரிவித்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ட்ரம்ப், “எனக்கு மிகவும் உறுதியான உத்தரவு உள்ளது.. எதாவது நடந்தால், அவர்கள் இந்த பூமியின் மேற்பரப்பிலிருந்தே அழிக்கப்படுவார்கள்,” என்று கூறினார். […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கையையும் மீறி, நாடு தழுவிய போராட்டங்களில் கைது செய்யப்பட்டவர்களுக்கு விரைவான விசாரணைகளும் மரண தண்டனைகளும் விதிக்கப்படலாம் என்று ஈரானின் நீதித்துறைத் தலைவர் சூசகமாக தெரிவித்துள்ளார். ஈரானில் டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய அரசுக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளன.. பல இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக மாறி உள்ளன.. இந்த போராட்டங்களில் இதுவரை 12 குழந்தைகள் உட்பட 2500 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த […]

ஈரான் அமெரிக்காவின் முகத்தில் பலத்த அடியை கொடுத்தது என்றும், அமெரிக்கா இந்த போரில் எதையும் சாதிக்கவில்லை என்று அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மீண்டும் எச்சரித்துள்ளார். ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்தத்திற்குப் பிறகு முதன்முறையாக உரையாற்றிய அவர் “அமெரிக்க ஜனாதிபதி தனது அறிக்கைகளில் ஒன்றில் ஈரான் சரணடைய வேண்டும் என்று குறிப்பிட்டார். சரணடையுங்கள்! என்று கூறினார்.. இது இனி செறிவூட்டல் அல்லது அணுசக்தித் துறை […]

இஸ்ரேலில் உள்ள மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி இனியும் இருக்கக்கூடாது என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இன்று கடுமையான எச்சரிக்கை விடுத்தார். இஸ்ரேல் – ஈரான் மோதல் 7வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை ஈரானின் இராணுவ உள்கட்டமைப்பு, மூத்த தளபதிகள் மற்றும் அணுசக்தி நிபுணர்களை குறிவைத்து இஸ்ரேலின் எதிர்பாராத வான்வழித் தாக்குதல் நடத்தியதால் […]