பக்ரீத் பண்டிகை முன்னிட்டு இன்று பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குர்ஆன் அருளப்பட்ட ரமலான் மாதத்தில் கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகை போல இந்த பக்ரீத் பண்டிகையும் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகையாக விளங்குகின்றது. இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத், இன்று கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் பக்ரீத் அன்று பொது விடுமுறை தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதேபோல், பல மாநிலங்களும் பொது விடுமுறையாக அறிவித்துள்ளன. இதனால் இன்று […]

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆங்காங்கே உள்ள ஈத்கா மைதானம் மற்றும் மசூதிகள், பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்தினர். தருமபுரி நகர அனைத்து மசூதிகள் கூட்டமைப்பின் சார்பில் கிருஷ்ணகிரி ரோட்டில் உள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நேற்று காலை நடைபெற்றது. […]

பக்ரித் பண்டிகை முன்னிட்டு இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது ‌ இது குறித்து விரைவுப்‌ போக்குவரத்துக்‌ கழக மேலாண்‌ இயக்குநர்‌ வெளியிட்ட அறிக்கையில்‌, பக்ரீத் முன்னிட்டு இன்று சென்னையில்‌ இருந்தும்‌ மற்றும்‌ பிற இடங்களிலிருந்தும்‌ கூடுதலான பயணிகள்‌ தமிழ்நாடுமுழுவதும்‌ பயணம்‌ மேற்கொள்வார்கள்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்‌ காரணமாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்‌ கழகங்கள்‌ மூலம்‌ தினசரி இயக்கப்படும்‌ பேருந்துகளுடன்‌ கூடுதலாக 400 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே […]

பக்ரீத் பண்டிகைக்கு திருச்சியில் மாநகராட்சி அங்கீகாரம் இல்லாத இடங்களில் மாடுகளை வெட்டுவதைத் தடுக்கக் கோரிய மனு தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் ஒரு பொதுநல மனுவில், விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் விதிகளை உறுதி செய்வதற்காக, மாநில அரசு/கார்ப்பரேஷனால் உரிமம் பெற்ற இடங்களைத் தவிர, வேறு எந்த […]