ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பகுதியில் இன்று அதிகாலை திடீரென ரயில் சென்றுக்கொண்டிருந்தபோது பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 7 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உக்ரைன் எல்லையிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வைகோனிச்ஸ்கி மாவட்டத்தில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான ரயில் கிளிமோவோவிலிருந்து மாஸ்கோவிற்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது, ஒரு பாலம் இடிந்து விழுந்ததில் ரயில் எஞ்சின் உட்பட பல பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் […]
Bridge collapse
பீகார் மாநிலத்தில் கட்டுப்பட்டு வந்த சுல்தாங்கஞ்ச் பாலம் இரண்டாவது முறையாக இடிந்து விழுந்தது. பீகார் மாநிலம் பாகல்பூரில் கட்டுமானப் பணியில் இருந்த அகுவானி-சுல்தாங்கஞ்ச் பாலம் இடிந்து கங்கை ஆற்றில் விழுந்தது. ககாரியா மற்றும் பாகல்பூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வந்த 100 அடி நீளம் கொண்ட இந்த பாலம் இரண்டாவது முறையாக ஆற்றில் சரிந்து விழுந்தது. பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் கனவுத் திட்டமாக 1,750 கோடி ரூபாய் செலவில் […]
நடைபாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு, 12 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். மகாராஷ்டிராவின் சந்திராபூரில் உள்ள பல்ஹர்ஷா ரயில்வே சந்திப்பில் மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 48 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 12 பேர் காயமடைந்தனர். ரயில் நடைமேடையில் அதன் கீழே நடந்து சென்ற பயணிகள் மீது படை பாலம் விழுந்தது. தகவல்களின்படி, உயர் மின்னழுத்த மேல்நிலை கம்பிகளுடன் தொடர்பு கொண்ட சில பயணிகள் படுகாயமடைந்தனர். […]
கடந்த அக்டோபர் 30ம் தேதி நடந்த மோர்பி பாலம் அறுந்து விழுந்து 135 பேர் பலியான சம்பவத்தில் அந்த நாளில் 3,165 டிக்கெட்டுகள் ஒரே நாளில் விற்பனையானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் அறுந்துவிழுந்தது. சாத் பூஜை மற்றும் விடுமுறையை ஒட்டி கடந்த அக்டோபர் 30ல் ஞாயிற்றுக்கிழமை அன்று ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கான […]
குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் குறைந்தது 70-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். குஜராத்தின் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றின் மீது உள்ள நூற்றாண்டு பழமையான தொங்கு பாலம் ஞாயிற்றுக்கிழமை மாலை அறுந்து விழுந்ததில் குறைந்தது 70-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாலம் நான்கு நாட்களுக்கு முன்பு பழுது பார்க்கப்பட்டது. நேற்று முன்தினம் முன்பு மீண்டும் திறக்கப்பட்ட பாலம், மாலை 6.30 மணியளவில் இடிந்து […]