பக்ரித் பண்டிகை முன்னிட்டு இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது ‌ இது குறித்து விரைவுப்‌ போக்குவரத்துக்‌ கழக மேலாண்‌ இயக்குநர்‌ வெளியிட்ட அறிக்கையில்‌, பக்ரீத் முன்னிட்டு இன்று சென்னையில்‌ இருந்தும்‌ மற்றும்‌ பிற இடங்களிலிருந்தும்‌ கூடுதலான பயணிகள்‌ தமிழ்நாடுமுழுவதும்‌ பயணம்‌ மேற்கொள்வார்கள்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்‌ காரணமாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்‌ கழகங்கள்‌ மூலம்‌ தினசரி இயக்கப்படும்‌ பேருந்துகளுடன்‌ கூடுதலாக 400 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே […]

அரசு போக்குவரத்து துறை தனியார் மயமாக்குதலை கண்டித்து போக்குவரத்துறை ஊழியர்கள் திடீரென பேருந்துகளை பணிமனைக்கு திருப்பி எடுத்துச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  போக்குவரத்து துறையில் ஒப்பந்த அடிப்படையில் 400 ஒப்பந்த ஒட்டுனர்களை நியமிக்க போக்குவரத்து துறை முடிவு செய்திருந்தது. தமிழ்நாட்டில் உள்ள 12 பணிமனைகளில் பல்வேறு வழித்தடத்தில் 400 ஒப்பந்த ஒட்டுனர்கள் நியமிக்க திட்டமிடபட்டிருந்தது. இந்நிலையில், அரசு அங்கிகரிக்கப்பட ஏஜென்சிகள் ஒப்பந்த்தை கோரலாம் என போக்குவரத்துதுறையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு […]

மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழக பணியாளர்கள்‌ பணிமணைகளில்‌ பாதுகாப்புடண்‌ பணிபுரிய கீழ்கண்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். பணிமனையின்‌ நுழைவு வாயிலில்‌ இருந்து தாங்கள்‌ செல்லும்‌ பிரிவிற்கு ஓரமாகவும்‌, பாதுகாப்பாகவும்‌ சென்றிட வரையறுக்கப்பட்ட (மஞ்சள்‌ வர்ண குறியீடு) பகுதியில்‌ நடந்து செல்ல வேண்டும்‌.’இருசக்கர வாகனங்களை எக்காரணம்‌ கொண்டும்‌ வாகனம்‌ நிறுத்தும்‌ இடம்‌ தவிர மற்ற பகுதிகளில்‌ நிறுத்தவும்‌ கூடாது, இயக்கிச்‌ செல்லவும்‌ கூடாது. பணிமனையின்‌ உள்ளே வரும்‌ பேருந்துகள்‌ நுழைவு வாயிலில்‌ இருந்து […]