கம்போடியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையே நடந்து வரும் போர், சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் மோதலை நினைவூட்டுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். இதுதொடர்பாக, ‘ட்ரூத் சோஷியலில் பதிவிட்டுள்ள அதிபர் டிரம்ப், இரு தரப்பினரும் அனைத்து விரோதங்களையும் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் தற்போதைய மோதலை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், தாய்லாந்து அல்லது கம்போடியாவுடன் எந்த வர்த்தக ஒப்பந்தத்தையும் செய்ய மாட்டேன் என்று எச்சரிக்கைவிடுத்துள்ளார். கம்போடிய பிரதமர் ஹன் மானெட்டுடன் தொலைபேசியில் உரையாடியதாக […]

