திருச்சியில் நடைபாதையில் படுத்திருந்த யாசகர்கள் மீது கார் மோதிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவத்தில் உடல் நசுங்கி மூன்று பேர் பலியாகியுள்ளனர். ஸ்ரீரங்கம் பகுதியில் அமைந்துள்ள அம்மா மண்டபம் அருகே நடைமேடையில் யாசகர்கள் நேற்றிரவு படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் ஒன்று அதன் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் படுத்திருந்த யாசகர்களின் மீது ஏறி இறங்கியது. இந்தக் கொடூர விபத்தில் […]

மேற்கு வங்க அமைச்சர் சென்ற வாகனம் சாலை விபத்தில் சிக்கியது. மேற்கு வங்க அமைச்சர் பாபுல் சுப்ரியோ சென்ற வாகனம் சாலை விபத்தில் சிக்கியது. பிர்பூமின் ராம்பூர்ஹாட் மாவட்டத்தில் சுப்ரியோவின் கான்வாய் வேகமாக வந்த ஆட்டோ மீது மோதியதில் குறைந்தது ஏழு பேர் காயமடைந்தனர். ராம்பூர்ஹத் திருவிழாவில் கலந்து கொள்ள தனி காரில் சென்று கொண்டிருந்த அமைச்சர் காயமின்றி உயிர் தப்பினார். வாகனத் தொடரணியில் பாதுகாப்புப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற […]

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இங்குள்ள அச்சல்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் லக்னோ-கான்பூர் நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை கார் மீது லாரி மோதியதில், ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கார் மோதியதைத் தொடர்ந்து, சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, ரோட்டில் நின்று கொண்டு இருந்தத ஒரு பெண் மற்றும் அவரது மகள் […]

ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜின் கார், விபத்துக்குள்ளானது. ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜின் கார், பஹதுர்கர் நகருக்கு அருகில் குருகிராம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. டிரக் ஒன்று காவல்துறையின் துணை வாகனம் மீது மோதியதில் விபத்து நடந்தது, அந்த வாகனம் அமைச்சரின் கார் மீது மோதியது, இதன் விளைவாக அதன் பின்புற பம்பரில் பள்ளம் ஏற்பட்டது. போலீசார் லாரி […]

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் கார் விபத்தில் சிக்கியுள்ளார். உத்தராகண்டில் இருந்து டெல்லி வந்து கொண்டிருந்த பொழுது கார் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்துள்ளது. அதன் பிறகு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தீவிர கண்காணிப்பில் தற்பொழுது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊடக அறிக்கையின்படி, ரூர்க்கியின் நர்சன் எல்லையில் ஹம்மத்பூர் ஜால் அருகே தடுப்பு […]

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி சென்ற கார் விபத்துக்குள்ளானதில், 4 பேர் காயமடைந்தனர். பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் கர்நாடக மாநிலம் மைசூரு அருகே காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் பந்திப்பூருக்குச் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது மதியம் 2 மணியளவில் நஞ்சன் கூடு என்ற பகுதி அருகில் உள்ள கடகோலா என்ற இடத்தில் அவர்களின் வாகனம் சாலை […]

பீகார் மாநிலத்தை சார்ந்த அவுதேஷ்(24), நிதீஷ்குமார்(24) உள்ளிட்ட இருவரும் கோவை மாவட்டம் செட்டிபாளையம் அடுத்து இருக்கின்ற சீராபாளையம் என்ற பகுதியில் இருக்கின்ற தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தனர். அத்துடன் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான குடியிருப்பில் இவர்கள் இருவரும் தங்கி வேலை பார்த்ததாக தெரிகிறது. இப்படியான சூழ்நிலையில், நேற்றைய தினம் இரவு அவுதேஷ்குமார், நிதீஷ்குமார் உள்ளிட்டோர் மலுமிச்சம்பட்டிக்கு சென்று தங்களுக்கு தேவைப்படும் மளிகை பொருட்களை வாங்கி இருக்கின்றனர். அதன் பிறகு […]