பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட யூடியூப் சேனல்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த […]
case
சென்னை உயர் நீதிமன்றத்தில், ஓஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், இயக்குநர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், ஆனந்தி, பாயல் ராஜ்புத், யோகிபாபு மற்றும் பலர் நடிப்பில் ‘ஏஞ்சல்’ என்ற படத்தை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான படப்பிடிப்பு 2018ம் ஆண்டு துவங்கி 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. இருபது சதவீத படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள சூழலில், ‘ஏஞ்சல்’ படத்தை நிறைவு செய்யாமல், […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் 2015 ஆம் ஆண்டு துப்புரவு தொழிலாளி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது தானே நீதிமன்றம். மும்பையைச் சார்ந்த 42 வயது துப்புரவு தொழிலாளர் ஒருவர் 2015 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பல்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டன. இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த வழக்கு […]
தூத்துக்குடியை அடுத்துள்ள சங்கரபேரி பகுதியைச் சார்ந்தவர் பிரபல ரவுடி கருப்பசாமி. இவர் மீது மூன்று கொலை வழக்குகள் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன. இந்நிலையில் நேற்று இரவு தனது குடும்பத்தாருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த ரவுடி கருப்பசாமியை 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரது வீட்டிற்குள் புகுந்து சுற்றி வளைத்து சராமாறியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த ரவுடி துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தார். உடனடியாக […]
இஸ்லாமிய பெண்கள் விவாகரத்து பெற்றாலும், மறுமணம் செய்யும் வரை அவர்களுக்கு முன்னாள் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு என அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஜாஹிதா கட்டூன் என்ற இஸ்லாமிய பெண் தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், ஒரு இஸ்லாமியப் பெண்ணுக்கு விவாகரத்து செய்யப்பட்ட கணவனிடமிருந்து ‘இத்தா’ காலம் முடியும் வரை மட்டுமல்ல, அவருடைய வாழ்நாள் முழுவதும் ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு […]
கர்நாடக மாநிலத்தில் இருக்கும் பிரபல மடங்களில் ஒன்று முருக மடம். சித்ரதுர்காவில் இருக்கும் இந்த மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் சிவமூா்த்தி முருகா சரணரு. முருக மடத்தின் சார்பில் தங்கும் விடுதி வசதியுடன் கூடிய பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பள்ளியில் தங்கி படித்து வந்த பத்தாம் வகுப்பு மாணவிகள் இரண்டு பேரை மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக குற்றச்சாட்டு […]