பெற்றோர் பெயரை திருத்துவற்கு அசல் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் (டிசி) அல்லது தலைமை ஆசிரியரால் சான்றொப்பம் இடப்பட்ட சான்றிதழ் நகல் பெற தலைமை ஆசிரியரின் கடிதம், கல்விச் சான்றிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் கோரும் விண்ணப்பங்களுடன் உரிய ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டியது அவசியம். அதன்படி, மாணவர் பெயர், பெற்றோர் பெயரை திருத்துவற்கு அசல் […]
certificate
மாநில தகுதித் தேர்வில் தமிழ் வழி ஒதுக்கீடு கோரும் விண்ணப்பதாரர்கள், அதற்கான சான்றிதழ்களை ஆகஸ்ட் 7-ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து தேர்வு வாரியம் வெளியிட்ட அறிக்கையில்; ஆசிரியர் தேர்வு வாரியத்தால் மாநில தகுதித் தேர்வு (செட் தேர்வு) கடந்த மார்ச் 6 முதல் 9-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி அடிப்படையில் […]
மாநில தகுதி தேர்வுக்கு சான்றிதழ் சமர்ப்பிக்க அவகாசம் வழங்கி ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது. செட் தேர்வு எழுதியவர்களில் தமிழ்வழி ஒதுக்கீட்டின் கீழ் முன்னுரிமை கோரும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தாங்கள் ஒன்றாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழ்களை (மாதிரி படிவத்தில் உள்ளபடி) உரிய அலுவலர்களிடம் கையொப்பம் பெற்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்யலாம் […]
10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் கோரும் விண்ணப்பங்களுடன் உரிய ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டியது அவசியம். அதன்படி, மாணவர் பெயர், பெற்றோர் பெயரை திருத்துவற்கு அசல் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் (டிசி) அல்லது தலைமை ஆசிரியரால் சான்றொப்பம் இடப்பட்ட சான்றிதழ் நகல், தலைமை ஆசிரியரின் கடிதம், கல்விச் சான்றிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும் என தேர்வுத் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மை […]
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் நகல் இன்று மதியம் வெளியிடப்பட உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பில்: 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கான நகல் இன்று மதியம் வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து மாணவர்கள் தங்களின் விடைத்தாள் நகல்களை www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். […]
அரசு பள்ளி ஆசிரியர்கள் மாறுதலில் செல்ல பள்ளிக்கல்வித்துறை இயக்குனரிடம் தடையின்மைச் சான்று பெறவேண்டும். இது குறித்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில்; பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு அல்லது நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் அவரவர்களின் விருப்பம் மற்றும் குடும்பச் சூழல் காரணமாக அலகுவிட்டு அலகு, துறை மாறுதலுக்குச் செல்லலாம். பள்ளிக்கல்வியிலிருந்து தொடக்கக் கல்வித் […]
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில், இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜவான்’. இந்தப் படத்தில், நயன்தாரா, ப்ரியாமணி, வில்லனாக விஜய் சேதுபதி, யோகிபாபு, சான்யா மல்ஹோத்ரா, சுனில் குரோவர் உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. கௌரவ வேடத்தில் தீபிகா படுகோனே, சஞ்சய் தத் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை, ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கௌரிகான் ஆகியோரின் தயாரிப்பு நிறுவனமான […]
நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்குதல் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அரசின் சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாயத்தை தமிழ்நாட்டில் 37-ஆவது இனமாக பழங்குடியினர் பட்டியலில் இணைத்து அறிவிக்கை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, அந்த சமுதாயத்தினர் அனைத்து அரசியலமைப்பு, பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களைப் பெற தகுதியடைய ஏதுவாக தமிழக அரசால் ஆணை வெளியிடப்பட்டது. பழங்குடியினர் மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க […]
அரசின் புதிய ஆணைப்படி ஜாதி சான்றிதழை புகைப்படத்துடன் கூடிய சான்றிதழாக ஏப்ரல் 16-ம் தேதிக்குள் மாற்றிக்கொள்ள வேண்டும்’ என தகவல் வாட்ஸ் ஆப்பில் பரவி வருகிறது.இது முற்றிலும் தவறான தகவல் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தமிழக அரசின் சின்னத்துடன் வாட்ஸ் ஆப்பில் அரசின் புதிய ஆணைப்படி, பழைய மற்றும் புகைப்படம் இல்லாமல் இருக்கும் ஜாதி சான்றிதழை புகைப்படத்துடன் கூடிய […]
நாடு முழுவதும் மொத்தம் 476 ஆயுர்வேதா, 56 யுனானி, 13 சித்த மருத்துவம், 7 சோவா-ரிக்பா மற்றும் 284 ஹோமியோபதி மருத்துவ நிறுவனங்கள் மூலம் கல்வி மற்றும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2021-22 கல்வி ஆண்டில் இளங்கலைப் பட்டப்படிப்பில், ஆயுர்வேதாவில் 34,202 இடங்களும், சித்த மருத்துவத்தில் 916, யுனானியில் 3103 இடங்களும், சோவா-ரிக்பாவில் 85 இடங்களும், ஹோமியோபதியில் 19757 இடங்களும் உள்ளது. மேற்கூறப்பட்டுள்ள மருத்துவ இடங்களுக்கான எண்ணிக்கை, கல்லூரியில் […]