தானேவில் மாணவிகளுக்கு மாதவிடாய் சோதனை செய்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தனியார் பள்ளி முதல்வர் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில், ஷாஹாபூரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தநிலையில் கடந்த செவ்வாய் கிழமை அன்று காலையில், பள்ளியின் கழிவறையில் ரத்தக் கறை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், 5 முதல் […]