சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள கரேகுட்டா மலைப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தொடர் கண்ணிவெடித் தாக்குதல்களில் 11 பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைக்காக ராய்ப்பூருக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஸ்தர் சரகத்தின் கீழ் உள்ள பிஜாப்பூர் மாவட்டத்தில் ஒரு பெரிய என்கவுண்ட்டர் நடந்த சில நாட்களுக்குப் பிறகு இந்த கண்ணிவெடித் தாக்குதல்கள் நடந்துள்ளன. ஜனவரி 17 […]

