மத்திய அரசின் சமீபத்திய ஜிஎஸ்டி விகிதக் குறைப்புகளை காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான பி. சிதம்பரம் வரவேற்றுள்ளார், ஆனால் இந்த நடவடிக்கை “8 ஆண்டுகள் தாமதமானது” என்று விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் தற்போதைய ஜிஎஸ்டி வடிவமைப்பு மற்றும் விகிதங்களை முதலில் அறிமுகப்படுத்தியிருக்கக்கூடாது என்றும், எதிர்க்கட்சிகள் பல ஆண்டுகளாக இந்தப் பிரச்சினைகளுக்கு எதிராக பலமுறை எச்சரித்து வந்தாலும், அவர்களின் வேண்டுகோள்கள் புறக்கணிக்கப்பட்டன என்றும் கூறினார். […]