ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் சிறப்பு நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வரலாற்றில் பாரத மாதாவின் உருவம் நாணயத்தில் செதுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று தெரிவித்தார். சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நாணயம் மற்றும் முத்திரை, தேசத்திற்கு ஆர்எஸ்எஸ் ஆற்றிய பங்களிப்பை எடுத்துக்காட்டுவதாகவும் பிரதமர் கூறினார். மேலும் “ இந்த ரூ.100 நாணயத்தின் ஒரு பக்கத்தில் தேசிய சின்னமும், மறுபுறம், […]

