தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள மாடுகளுக்கு தோல்கழலை நோயின்‌ அம்மைநோய்‌ தாக்கம்‌ பரவலாக ஏற்பட்டு கால்நடைகளுக்கு பெரும்‌ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நோயினை கட்டுப்படுத்தும்‌ நடவடிக்கையாக கால்நடை பராமரிப்புத்துறையின்‌ மூலமாக மாவட்டத்திலுள்ள 3,50,000 மாடுகளுக்கு இத்தடுப்பூசியினை செலுத்தும்‌ பொருட்டு 3,86,500 டோஸ்கள்‌ தடுப்பூசி மருந்துகள்‌ பெறப்பட்டு தடுப்பூசிப்பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்கள்‌ மூலமாகவும்‌,கால்நடை மருந்தகங்கள்‌ மூலமாகவும்‌, இதுவரை 1,63,600 டோஸ்கள்‌ தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதமுள்ள மாடுகளுக்கு […]