கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கிழக்கு ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.. இந்த நிலநடுக்கத்தில் 2,200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தலிபான் அதிகாரிகள் வியாழக்கிழமை உறுதிப்படுத்தினர். இந்த பேரழிவில் கிட்டத்தட்ட 4,000 பேர் காயமடைந்துள்ளனர், பெரும்பாலான உயிரிழப்புகள் பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள மலைப்பாங்கான குனார் மாகாணத்தில் பதிவாகியுள்ளன. அரசாங்க துணை செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபித்ரத், எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் இறப்பு எண்ணிக்கை […]