2026ம் கல்வியாண்டில் இருந்து 10ம் வகுப்பு வாரியத் தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) அறிவித்துள்ளது. தேசிய கல்விக்கொள்கை 2020 அடிப்படையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வை பயமின்றி எழுதும் வகையில் பொதுதேர்வு நடைமுறையில் மாற்றம் கொண்டு வரும் வகையில் ஒரு வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில், 10ம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்தலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. […]