மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தத்தங்குடியைச் சேர்ந்தவர் பழனி குருநாதன் (55). இவர் மங்கைநல்லூர் கடைவீதியில் தச்சுப் பட்டறை வைத்து நடத்தி வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த புராசாமி (65) என்பவர் அவரது தச்சுப் பட்டறையில் வேலை பார்த்து வந்துள்ளார். இருவரும் நண்பர்கள்போல் பழகிவந்த நிலையில், இரவு நேரங்களில் மது குடிப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று இரண்டு பேரும் வாந்தி மயக்கத்துடன் பட்டறையில் கிடந்துள்ளனர். இதை அறிந்த […]

தர்மபுரி அருகே சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி மூன்று யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தர்மபுரி மாவட்டம் மரகண்டஹள்ளி அடுத்த கவுண்டன் பாறை கொட்டாய் கிராமத்தைச் சார்ந்தவர் விவசாயி முருகேசன். இவர் தனது விவசாய நிலங்களை விலங்குகள் தாக்காமல் இருப்பதற்காக சட்டத்திற்கு புறம்பாக மின்வேலிகளை அமைத்திருக்கிறார். இந்நிலையில் இவரது தோட்டத்திற்குள் இரண்டு குட்டி யானைகளை கொண்ட ஐந்து யானைகள் புகுந்துள்ளன. அப்போது எதிர்பாராத விதமாக […]

பிரபல ஒளிப்பதிவாளர் பிரவீன் அனுமோலு மாரடைப்பால் காலமானார். பிரபல ஒளிப்பதிவாளர் பிரவீன் அனுமோலு மாரடைப்பால் காலமானார். அவர் தூம் 3, பாஜிராவ் மஸ்தானி, பேபி போன்ற பல வெற்றிப் படங்களில் பணியாற்றிய குறிப்பிடத்தக்க ஒளிப்பதிவாளர் என அங்கீகரிக்கப்பட்டவர். ஒளிப்பதிவாளரின் அகால மறைவுக்கு டோலிவுட் துறையைச் சேர்ந்த பல முக்கியப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரவீன் அனுமோலுவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவரது குடும்பத்தினர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு […]

அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் நகரில் பிஈ20 சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த ஐந்து நபர்கள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் அர்கன்சாஸ் நகரில் உள்ள கிளின்டன் விமான நிலையத்திலிருந்து ஒகியோ நகரில் உள்ள ஜான் க்ளென் கொலம்பஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு இரட்டை எஞ்சின் கொண்ட பிஇ20 என்ற சிறிய ரக விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கிளின்டன் விமான நிலையத்திற்கு அருகில் […]

சிவகாசி அருகே பெர்நாயக்கன்பட்டியை சேர்ந்த கணேசன் மற்றும் உமய லட்சுமிக்கு 9 வயதில் மகளும், 7 வயதில் மகனும் உள்ளனர். இவரது மனைவி உமயலட்சுமி 5 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். கடந்த ஆண்டு அவரது சகோதரி ராதிகாவை மறுமணம் செய்து கொண்டார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு குடும்ப பிரச்சனை காரணமாக ராதிகா தனது தாய் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த மன உளைச்சல் காரணமாக அவர் தனது […]

வேலூர் மாவட்ட  பகுதியில் உள்ள மலைச்சந்து கிராமத்தில் விவசாயியான சிலோர்மணி (எ) மணிகண்டன் (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மாலை விவசாய நிலத்தில் நெல் பயிரிடுவதற்காக தனது டிராக்டரை வைத்து உழுது கொண்டிருந்துள்ளார்.  அப்போது ஒரு வாய்க்காலிருந்து மற்றொரு கால்வாயிக்கு செல்வதற்காக கால்வாயின் கரையில் டிராக்டரை ஏற்றியபோது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் கவிழ்ந்து மணிகண்டன் படுகாயம் அடைந்தார். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், […]

வேலுார் மாவட்ட பகுதியில் உள்ள காட்பாடி மணவாளமோடில் கட்டட தொழிலாளி வல்லரசு (45) எனபவர் வசித்து வருகிறார். இவர் வீட்டிற்கு அருகில் பாழடைந்த தூர்வாராத நிலையில் 400 அடி ஆழ கிணறு இருந்துள்ளது. அதில் நாய் குட்டி ஒன்று நேற்று முன்தினத்தில் மாலை நேரத்தில் தவறி விழுந்துள்ளது. இதனை கண்ட வல்லரசு முதலில் கயிற்றில் வாளியினை கட்டி நாயை அதன்மூலம் காப்பாற்ற முயன்றிருக்கிறார். ஆனால் நிலை தடுமாறி அவரும் கிணற்றில் […]

பிரபல சீரியல் இயக்குனர் தாய் செல்வம் உயிரிழந்துள்ளார். விஜய் தொலைக்காட்சியின் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு அதிகப்படியான ரசிகர்கள் இருக்கின்றனர். மற்ற தொலைக்காட்சி சீரியல்களை விட விஜய் டிவி சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவது வழக்கம். 💔 உங்களது படைப்புகள் என்றும் எங்கள் மனதில்..#RIPDirectorThaiSelvam#KaathuKaruppu #Thaayumaanavan #KalyanamMudhalKaadhalVarai #MounaRaagam Season 1#NaamIruvarNamakkuIruvar#PaavamGanesan#EeramaanaRojaave Season 2 pic.twitter.com/CYFDVCHnVK — Vijay Television (@vijaytelevision) December 15, 2022 அந்த […]

திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள நல்லாம்பிள்ளையில் பழனிசாமி என்பவர் தனது மகன் பிரமோத்(14) என்பவருடன் வசித்து வருகிறார். சிறுவன் சிங்காரப்பேட்டையில் இருக்கும் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  நேற்று விடுமுறை என்பதால் பிரமோத் தனது நண்பர்களுடன் அருகில் இருக்கும் தோட்டத்திற்கு சென்றுள்ளான். இதனை தொடர்ந்து தோட்டத்திலுள்ள 80 அடி ஆழ கிணற்றில் நண்பர்கள் குளித்து கொண்டிருந்தனர். அப்போது நீச்சல் தெரியாத சிறுவன் கிணற்றின் சுவரில் அமர்ந்து […]

புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் உள்ள துவரவயல் கிராமத்தில் திருநாவுக்கரசு (31) என்பவர் தனது மனைவி வினிதா என்பவருடன் வசித்து வருகிறார். கணவர் நேற்றைய தினத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. திருநாவுக்கரசரின் உடலை பார்த்த அவரது மனைவி பெரும் அதிர்ச்சியில் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை தொடர்ந்து […]