இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; அனுமதி பெறாமல்‌ வைக்கப்படும்‌ விளம்பர பலகைகள்‌/பதாகைகள்‌ மற்றும்‌ விளம்பர தட்டிகள்‌ / அட்டைகள்‌ அகற்றுவது தொடர்பாக காஞ்சிபுரம்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ தலைமையில்‌ 02.06.2023 அன்று தொடர்புடைய துறை அலுவலர்களின்‌ ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்‌ நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில்‌ விளம்பர பலகைகள்‌/பதாகைகள்‌ அனுமதி பெறாமல்‌ நிறுவப்பட்டிருப்பதை அகற்றுவது,தொடர்பாக பின்வரும்‌ முடிவுகள்‌ எடுக்கப்பட்டன. கிராம ஊராட்சி பகுதிகளில்‌ விளம்பர பதாகைகள்‌ நிறுவ தமிழ்நாடு […]

தமிழ்நாடு ஆதிதிராவிடர்‌ வீட்டுவசதி மற்றும்‌ மேம்பாட்டுக்‌ கழகம்‌ (தாட்கோ) மூலமாக தொழில்‌ முனைவோரின்‌ பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும்‌ வகையில்‌ தமிழ்நாடு சிமெண்ட்‌ கழகத்தின்‌ விற்பனை முககர்‌ திட்டத்தில்‌ வருவாய்‌ ஈட்டிட ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினரிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது என காஞ்சிபுரம்‌ மாவட்ட ஆட்சித்‌தலைவர்‌ தெரிவித்துள்ளார்‌. ஆதிதிராவிடர்‌ நலத்துறை அமைச்சர்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினரின்‌ தொழில்‌ முனைவோரின்‌ பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும்‌ வகையில்‌ தமிழ்நாடு சிமெண்ட்‌ விற்பனை முகவர்‌ திட்டத்தை அறிவித்தார்கள்‌. […]

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் வரும் 13-ம் உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை அடுத்த திருவப்பூரில், புகழ் பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் மாசி பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெறும். வரும் 12-ம் தேதி, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழாவும், மறுநாள், 13-ம் தேதி மாலை தேரோட்டமும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேரோட்டம் நடைபெறும் 13-ம் தேதி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு […]

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இன்று காலை 10 மணி முதல் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாம், மூன்றாம், நான்காம் வெள்ளிக்கிழமையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன் படி, இன்று அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெறவுள்ள தனியார் […]

இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தமிழ்நாடு அரசின் சார்பில் படித்த வேலை வாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி மாற்று திறனாளிகளுக்கு மாதம் ஒன்றுக்கு SSLC மற்றும் அதற்குகீழ் படித்தவர்களுக்கு ரூ.600, மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750, பட்டதாரிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பற்ற அனைத்துவகை மாற்று திறனாளிகளுக்கான உதவித்தொகையானது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சேர்த்து, வழங்குவதற்கு பதிலாக, மாதம் தோறும் […]

நீலகிரி மாவட்டத்தில் 2 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றும் கனமழை காரணமாக குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய இரண்டு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார். கேரள – கர்நாடக கடலோரப் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.இதன் […]