பாலாஜியின் கைது நடவடிக்கையை தொடர்ந்து சட்டவல்லுநர்களுடன்‌ முதல்வர்‌ ஸ்டாலின்‌ சென்னையில்‌ உள்ள தனது இல்லத்தில்‌ ஆலோசனை மேற்கொண்டுள்ளார்‌. அமைச்சர்‌ செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில்‌ அவசர ஆலோசனையில்‌ ஈடுபட்டு வருகிறார்‌. செந்தில்பாலாஜி முக்கிய துறைகளின்‌ அமைச்சராக இருப்பதால்‌, மாற்று ஏற்பாடுகள்‌ குறித்தும்‌ ஆலோசனையில்‌ ஈடுபட்டுள்ளதாக தகவல்‌ வெளியாகியுள்ளது. போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சென்னை வீடு உள்பட […]

புதுமைப்பெண் திட்டத்தால் உயர்கல்வி படிக்கும் மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார் ‌‌. ஊட்டியில் நடைபெற்று வரும் துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் வைத்த குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்களும் பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி; தமிழகத்தில் கல்வித்தரம் குறைந்து விட்டதாக ஆளுநர் கூறுகிறார். ஆளுநர் எத்தனை கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்துள்ளார். தமிழகத்தில் உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் கல்வி […]

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை திமுக தலைவர்‌ ஸ்டாலின்‌ தலைமையில்‌ கட்சியின் உயர்நிலை செயல்‌ திட்டக்‌ குழு கூட்டம்‌ நடைபெறும்‌ என பொதுச்செயலாளர்‌ துரைமுருகன்‌ அறிவித்துள்ளார்‌. திமுக தலைவர்‌ ஸ்டாலின்‌ தலைமையில்‌ திமுக உயர்நிலை செயல்‌ திட்டக்‌ குழுக்‌கூட்டம்‌ நாளை காலை 10.30 மணி அளவில்‌ சென்னை அண்ணா அறிவாலயத்தில்‌ உள்ள திமுக அலுவலகத்தில்‌ உயர்நிலை செயல்‌ திட்டக்‌ குழு கூட்டம்‌ நடைபெறும் என தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்‌. […]

முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ தலைமையில்‌ சென்னை தலைமை செயலகத்தில் இன்று அமைச்சரவைக்‌ கூட்டம்‌ நடைபெற உள்ளது. முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ தலைமையில்‌ சென்னை தலைமை செயலகத்தில் இன்று அமைச்சரவைக்‌ கூட்டம்‌ நடைபெற உள்ளது. மாலை 5 மணியளவில்‌ நடைபெறும்‌ அமைச்சரவைக்‌ கூட்டத்தில்‌, பட்ஜெட்‌ கூட்டத்தொடரில்‌ அறிவிக்கப்பட்ட திட்டங்கள்‌, துறை வாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள்‌ மற்றும்‌ அவற்றை செயல்படுத்தும்‌ நடைமுறைகள்‌ குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சட்ட பேரவையில்‌ நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள்‌ குறித்து […]

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார். கருணாநிதி நூற்றாண்டையொட்டி, 1,000 படுக்கைகளுடன் அதிநவீன வசதிகளுடன் சென்னையில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அழைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக சென்னை விமான நிலையம் சென்றார். அமைச்சர்கள், அதிகாரிகள் அவரை வழியனுப்பி வைத்தனர். ஆனால் டெல்லி […]

முத்திரைத்தாள் விலை உயர்வை அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். இது குறித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில்; மக்களின்‌ வாழ்வாதாரம்‌ முன்னேற வழிவகை செய்யாத திறனற்ற திமுக அரசு விலையேற்றம்‌ ஒன்றை மட்டுமே பரிசாக வழங்கி வருகிறது.திறனற்ற திமுக, ஆட்சிக்கு வந்த நாள்‌ முதல்‌ தொடர்ச்சியாக விலையேற்றம்‌ ஒன்றை மட்டும்‌ மூன்று மாத இடைவெளியில்‌ மக்களுக்கு பரிசாக வழங்கி வருகிறது. […]

குரூப் 4 தேர்வு முறைகேடு குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசு நிர்வாகம் முறையாக நடைபெற வேண்டுமானால், அதற்கு அடித்தளமாக விளங்குபவர்கள் அரசுப் பணியாளர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. மக்களுக்குத் தேவையான சான்றிதழ்களை வழங்குவது, பேரிடர் காலத்தில் மீட்பு, நிவாரணம், மறுவாழ்வு போன்ற பணிகளை மேற்கொள்வது, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது, உணவுப் பொருட்களை வழங்குவது, தேர்தல்களை நடத்துவது என […]

தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிரதமராகும் வாய்ப்பு இருப்பதாக ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் சென்னையில் நேற்று நடைபெற்றது‌. முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களின் வலிமையை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், 2024 தேர்தலில் பாஜகவை எதிர்கொள்வதற்கான வியூகமாக பார்க்கப்படுகிறது . பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு தலைவர் ஃபரூக் அப்துல்லா, போயிட்ட முக்கிய தலைவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். […]

ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக போட்டியிட்டால் அது திமுகவுக்கு சாதகமாகிவிடும் என அரசியல் விமர்சகர் ஸ்ரீராம் சேஷாத்ரி கருத்து தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த சில நாட்களுக்கு முன் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகிவிட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இந்நிலையில் மேகலாயா, திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. […]