இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராமம் தோரும் தனியார் ‘இ- சேவை மையம் அமைத்திட புதிய உரிமம் மாற்றுத்திறனாளிகளிடமிருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இவ்விண்ணப்பத்தினை மாற்றுத்திறனாளிகள் https://tnesevai.tn.gov.inமற்றும் https://inega.tn.gov.in என்ற இணையதளங்களில் வருகின்ற 20.07.2023-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை (தொலைபேசி எண் : 044-29998040) அணுக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
E seva
தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவைமையம் இல்லாத பகுதிகளில் இ-சேவைமையங்களை நிறுவி செயல்படுத்த இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்ஆளுமை முகமை, அரசு இ-சேவை மையங்களான தமிழ்நாடு அரசு கேபிள்டிவி நிறுவனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுகடன் வழங்கும் சங்கங்கள், தமிழ்நாடு மகளிர்நல மேம்பாட்டு நிறுவனம்,மீன்வளத்துறை, மற்றும் கிராமப்புற தொழில்முனைவோர் மூலம் மக்களுக்கான அரசின் சேவைகளை, அவர்களின் […]