அருமனை அருகே உள்ள வட்டவிளையில் ஆட்டோ ஓட்டுனர்கள் சேர்ந்து பெண் ஒருவரை கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது. அருமனை அருகே உள்ள மேல்புறம் வட்டவிளையில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் இந்தப் பெண்மணி தனது தாயுடன் வசித்து வருகிறார். மேல்புறம் சந்திப்பு வழியாக அந்த பெண்மணி செல்லும் போதெல்லாம் அவரை கிண்டல் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர் […]