தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் செலுத்தாமல் செல்பவர்கள் இனிமேல் இரட்டிப்புச் சுங்கக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும். 15 நாட்களுக்கு மேல் கட்டணம் செலுத்தத் தவறினால், அந்த வாகனத்தின் மீதும், அதன் போக்குவரத்தின் மீதும் பல்வேறு கட்டுப்பாடுகளும் தடைகளும் விதிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் இந்தப் புதிய விதிமுறைகளை வகுத்துள்ளதுடன், கட்டணம் செலுத்தத் தவறியவர்களுக்கு மின்னணு அறிவிப்புகளை (e-notices) அனுப்பவும் முடிவு செய்துள்ளது. […]

நாடு முழுவதும் புதிய சுங்கக்கட்டணம் முறை நாடு முழுவதும் அமலாகிறது என்ற சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.. மக்களவையில் கேள்வி நேரத்தில் பேசிய அவர் “ புதிய சுங்கக்கட்டண முறை தற்போது 10 இடங்களில் சோதனை முயற்சியாக தொடங்கப்பட்டுள்ளது.. இது ஒரு ஆண்டுக்குள் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். இந்த புதிய முறையால், வாகனங்களை நிறுத்தி சுங்கக் கட்டணம் வசூலிக்கும் பழைய முறை முடிவுக்கு வரும். […]