தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர்கள் வாரியத்தின் 233-வது கூட்டம் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தலைமையில் நேற்று நடைபெற்றது. 2022-23 நிதியாண்டிற்கான உறுப்பினர்களின் கணக்குகளில் 8.15% வருடாந்திர வட்டியை வரவு வைக்க மத்திய வாரியம் பரிந்துரைத்தது. வட்டி வீதம் அரசிதழில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும், அதைத் தொடர்ந்து வட்டித் தொகையை சந்தாதாரர்களின் கணக்கில் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வரவு வைக்கும்.வளர்ச்சி மற்றும் உபரி […]
EPFO bank account
இபிஎஸ்-95 திட்டத்தின் கீழ், அதிக சம்பளம் பெறுவோருக்கான கூட்டு விருப்பப்படிவத்தை தொழிலாளர் காப்பீட்டு கழகம் இபிஎப்ஓ வடிவமைத்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த படிவம் வழி வகுக்கிறது. இபிஎப்ஓ ஒருங்கிணைந்த போர்ட்டலில் இதற்கு தேவையான ஆவணங்களுடன் கூட்டு விருப்பப் படிவத்தை, அடிப்படை திட்ட விதிகளுக்கு இணங்க சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 03 மே, 2023 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 8,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.அதிக ஊதியத்தில் பணியாளர் மற்றும் பணி […]
தொழிலாளர் காப்பீட்டுத் திட்டத்தின் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான ஊதியத் தரவு விவரங்கள் வெளியிடப்பட்டது. அதன்படி 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 18 லட்சத்து மூவாயிரம் புதிய ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொழிலாளர் காப்பீட்டுத் திட்டத்தில் பங்களிப்பு செய்த ஊழியர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 52 ஆயிரமாக அதிகரித்துள்ளது. தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் […]
ஓய்வூதியம் பெறுபவர்களின் உயிருடன் இருப்பதற்க்காண இன்றியமையாத ஆவணம் ஆயுள் சான்றிதழாகும், இது அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதிய விநியோகஸ்தர், வங்கி அல்லது தபால் அலுவலகம் போன்ற ஏஜென்சியிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும், மேலும் ஓய்வூதியம் பெறுபவரின் பணியிடத்தில் அவரது மரணத்திற்குப் பிறகு பணம் செலுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது. ஓய்வூதியம் வழங்குவதற்கு முன், வழக்கமாக வருடத்திற்கு ஒருமுறை தேவைப்படும் இந்தச் சான்றிதழை வழங்குவதற்கு அரசாங்கமும் காப்பீட்டு நிறுவனங்களும் அறிவுறுத்துகின்றன. இதற்கு முன்பு இந்த சான்றிதழை […]
இபிஎப் உறுப்பினர்கள் இபிஎப் தொடர்பான புகார்கள் அல்லது குறைகளை பதிவு செய்ய EPF i-Grievance Management System-ஐ பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம் என்று ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது. EPFIGMS என்பது இபிஎப்ஓ வழங்கும் சேவைகளுக்கான குறைகளை நிவர்த்தி செய்ய தனிப்பயனாக்கப்பட்ட போர்டல் ஆகும். குறைகளை எந்த இடத்திலும் பதிவு செய்யலாம் மற்றும் புகார்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு வந்து சேரும். குறைகளை புது தில்லியில் உள்ள தலைமை […]