EPFO அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது. EPF-ல் இருந்து அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க ஜுலை 11-ம் தேதி கடைசி நாளாகும். EPF உறுப்பினர்கள் இந்த காலக்கெடுவை தவறவிட்டால், அவர்கள் அதிக ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும். தேவைப்படும் ஆவணங்கள்: உங்கள் […]
epfo money
ஊழியர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் தற்காலிக சம்பளப்பட்டியல் புள்ளி விவரம் 2023 ஜூன் 20 அன்று வெளியிடப்பட்டது. இதன்படி இந்த அமைப்பின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 2023 ஏப்ரல் மாதத்தில் 17.20 லட்சம் கூடியுள்ளது.இவர்களில் 8.4 லட்சம் புதிய உறுப்பினர்கள் முதன்முறையாக சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வந்துள்ளனர். புதிதாக சேர்ந்த உறுப்பினர்களில் 54.15 சதவீதம் பேர் 18-லிருந்து25 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களில் பெரும்பாலோர் அமைப்பு சார்ந்த தொழில்துறையில் இணைந்திருப்பதோடு […]
உங்கள் EPFO இருப்பை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதை பார்க்கலாம். நீங்கள் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், உங்கள் மொபைல் எண் உங்கள் பிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால், UAN எண் இல்லாமல் கூட உங்கள் பிஎஃப் கணக்கு இருப்பு தொகை பற்றிய தகவலைப் பெறலாம். அதேபோல, 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் செய்வதன் மூலம், தங்கள் கணக்கின் இருப்பை அறியலாம். இந்த எண்ணுக்கு நீங்கள் மிஸ்டு கால் செய்தவுடன், உங்கள் […]
வருங்கால வைப்பு நிதி அமைப்பு மார்ச் மாதத்தில் மட்டும் 13.40 லட்சம் நிகர உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது. 2023 மே 20-ம் தேதியன்று வெளியிடப்பட்ட ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் தற்காலிக ஊதியத் தரவின்படி, 2023 மார்ச் மாதத்தில் 13.40 லட்சம் நிகர உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது. மொத்த நிதியாண்டில் 1.39 கோடி உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். முந்தைய நிதியாண்டான 2021-22 உடன் ஒப்பிடும்போது 13.22% உறுப்பினர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். அதேபோல மார்ச் […]
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர்கள் வாரியத்தின் 233-வது கூட்டம் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தலைமையில் நேற்று நடைபெற்றது. 2022-23 நிதியாண்டிற்கான உறுப்பினர்களின் கணக்குகளில் 8.15% வருடாந்திர வட்டியை வரவு வைக்க மத்திய வாரியம் பரிந்துரைத்தது. வட்டி வீதம் அரசிதழில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும், அதைத் தொடர்ந்து வட்டித் தொகையை சந்தாதாரர்களின் கணக்கில் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வரவு வைக்கும்.வளர்ச்சி மற்றும் உபரி […]
இபிஎஸ்-95 திட்டத்தின் கீழ், அதிக சம்பளம் பெறுவோருக்கான கூட்டு விருப்பப்படிவத்தை தொழிலாளர் காப்பீட்டு கழகம் இபிஎப்ஓ வடிவமைத்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த படிவம் வழி வகுக்கிறது. இபிஎப்ஓ ஒருங்கிணைந்த போர்ட்டலில் இதற்கு தேவையான ஆவணங்களுடன் கூட்டு விருப்பப் படிவத்தை, அடிப்படை திட்ட விதிகளுக்கு இணங்க சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 03 மே, 2023 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 8,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.அதிக ஊதியத்தில் பணியாளர் மற்றும் பணி […]
தொழிலாளர் காப்பீட்டுத் திட்டத்தின் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான ஊதியத் தரவு விவரங்கள் வெளியிடப்பட்டது. அதன்படி 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 18 லட்சத்து மூவாயிரம் புதிய ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொழிலாளர் காப்பீட்டுத் திட்டத்தில் பங்களிப்பு செய்த ஊழியர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 52 ஆயிரமாக அதிகரித்துள்ளது. தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் […]
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வாடிக்கையாளர்களின் வசதிக்காக பல சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் எஸ்எம்எஸ் மற்றும் ஆன்லைன் மூலம் PF தொகையின் இருப்பை சரி பார்ப்பது எப்படி என்பதை பார்க்கலாம். குறுஞ்செய்தி மூலம் இருப்பை எப்படி பார்ப்பது…? உங்கள் UAN எண் இபிஎப்ஓ-வில் பதிவு செய்யப்பட்டிருந்தால், உங்கள் PF இருப்பு பற்றிய தகவலை SMS மூலம் பெறலாம். இதற்கு, 7738299899 என்ற எண்ணுக்கு EPFOHO என […]
இபிஎப் உறுப்பினர்கள் இபிஎப் தொடர்பான புகார்கள் அல்லது குறைகளை பதிவு செய்ய EPF i-Grievance Management System-ஐ பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம் என்று ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது. EPFIGMS என்பது இபிஎப்ஓ வழங்கும் சேவைகளுக்கான குறைகளை நிவர்த்தி செய்ய தனிப்பயனாக்கப்பட்ட போர்டல் ஆகும். குறைகளை எந்த இடத்திலும் பதிவு செய்யலாம் மற்றும் புகார்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு வந்து சேரும். குறைகளை புது தில்லியில் உள்ள தலைமை […]
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வாடிக்கையாளர்களின் வசதிக்காக சில சேவைகளைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது, அதன் படி, வாடிக்கையாளர்கள் அந்த புதிய சேவைகளை தங்கள் வீட்டில் இருந்தே முடியும். ஓய்வூதியம் பெறுவோர், அந்தச் சேவைகளைப் பெற, அருகில் உள்ள எந்தவொரு அலுவலக கிளைக்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆன்லைனில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இபிஎப்ஓ வழங்கும் சேவைகள்: ஓய்வூதிய கோரிக்கைகளை UMANG ஆப் மூலம் அல்லது ஆன்லைனில் சமர்ப்பிக்க முடியும். மேலும் […]