ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள பாலக்கரையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வெகுகாலமாக செயல்பட்டு வருகிறது. அந்த தொடக்கப்பள்ளியில் 33 மாணவ, மாணவிகள் படித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பள்ளியில் இரு கழிவறைகள் இருக்கின்றன. அதில் ஒரு கழிவறையை ஆசிரியர்களும், மற்றொரு கழிவறையை மாணவர்களும் பயன்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த கழிப்பறைகளை நாள்தோறும் 2 மாணவர்கள் தூய்மைப்படுத்த வேண்டும் என்று பள்ளியின் தலைமை ஆசிரியை கீதாராணி அறிவுறுத்தியதாக தெரிகிறது. தலைமை ஆசிரியரின் […]