கும்பகோணம் பாலக்கரையில், பள்ளி தீவிபத்தினால் உயிரிழந்த 94 பள்ளிக் குழந்தைகளின் நினைவிடத்தில் இளைஞர் அரண் அமைப்பு சார்பில் ஒவியக் கண்காட்சி நடைபெற்றது.இக்கண்காட்சியை மேயர் சரவணன் தொடங்கி வைத்தார். தமிழ்த் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தியாகு, இளைஞர் அரண் தமிழ்நாடு அமைப்பாளர் சைமன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்க அமைப்புச் செயலாளர் மகிழன், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில், கல்வி பாதுகாப்பு, அரசுக் கல்லூரியில் மாணவர்களுக்கான உரிமைகள், […]

விருதுநகர் மாவட்டம், விளாம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.. இந்த பட்டாசு ஆலையில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இங்கு பணிபுரிந்து வருகின்றனர்.. இந்நிலையில் இன்று எதிர்பாராத விதமாக அந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.. […]

ஆந்திர மாநிலத்திலுள்ள வேணுகோபால் சுவாமி கோவிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியிலுள்ள தனுசு மண்டலத்தில் வேணுகோபால் சுவாமி கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலில் ராம் நவமி விழாக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தக் கோவிலில் தான் சற்று முன்பு தீ விபத்து நடைபெற்றிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை. இங்கு ராம நவமி திருவிழா நடைபெறுவதால் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர் […]

சென்னையில் இயங்கி வரும் பிரபலமான சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் கிளைகள் இருக்கின்றன. மதுரையின் மாட்டுத்தாவணியில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையின் ஒன்பதாவது மாடியில் சற்றுமுன் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடையில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் மற்றும் கடையில் வேலை செய்பவர்கள் அனைவரும் அவசரமாக கடையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வாகனங்கள் கடையில் ஏற்பட்ட தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர். […]

திருவிழா உள்ளிட்ட மக்கள் நெருக்கடி உள்ள பகுதிகளுக்கு தங்களுடைய குழந்தைகளை அழைத்துச் செல்லும் போது பெற்றோர்கள் விழிப்புடன் இருப்பது அவசியம் என்று பல சமயங்களில் காவல்துறையினர் எச்சரிக்கை செய்வதுண்டு.பல கோவில் திருவிழாக்களில் காவல்துறையினர் இது போன்ற எச்சரிக்கைகளை ஒலிபெருக்கியின் மூலமாக செய்து கொண்டே தான் இருப்பார்கள். ஆனால் அதையும் மீறி ஒரு சில அசம்பாவிதங்கள் நடப்பதுண்டு, அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள மாளிகை பட்டை பகுதியில் காசிநாதன் என்பவர் […]

பட்டாசு ஆலையில் நடந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடக்கம்பட்டி அழகு சிறை கிராமத்தில் செயல்பட்டு வந்த வெள்ளைப்பவன் என்பவரின் பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. இவருக்கு சொந்தமாக இரண்டு குடோன்கள் செயல்பட்டு வருகின்றது. இதில் பட்டாசுகள் எல்லாம் படபடவென வெடித்து சிதறியது. தீவிபத்தில் 5க்கும் மேற்பட்டவர்கள் குடோனில் இருந்துள்ளனர். 5 பேர் உயிரிழந்தாக தகவல்கள் வெளியாகி […]