இன்றைய காலகட்டத்தில், எப்போது யாருக்கு மாரடைப்பு வரும் என்று தெரியாத சூழ்நிலை நிலவுகிறது. ஏனெனில் ஒரு காலத்தில் வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்த மாரடைப்பு இன்று வயது வித்தியாசமின்றி பள்ளி குழந்தைகள், இளைஞர்கள் என அனைவரையும் பாதித்து வருகிறது.. மோசமான உணவுப் பழக்கம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை போன்ற பல காரணிகள் இதய நோய்களுக்கு வழிவகுக்கும். சில நேரங்களில் இவை ஆபத்தானவை. […]