ராமநாதபுரம் மாவட்டத்தில் பார்சல் சாப்பாடு லேட்டானதால் ஆத்திரமடைந்த நபர் ஹோட்டல் உரிமையாளரின் விரலை கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள பேரூராட்சிக்கு அருகில் ஹோட்டல் கடை நடத்தி வருபவர் கதிரேசன் வயது 50. எந்நேரமும் கூட்டம் அதிகமாகிருக்கும் இவரது கடையில் வேலையாட்களை வைத்துக் கொள்ளாமல் இவர் ஒருவரே எல்லா வேலையும் செய்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று முஷ்ட குறிச்சியை சார்ந்த வழிவிட்டான் என்பவர் […]