ஈரான் பேச்சுவார்த்தை மேடைக்கு வர வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் விதித்த கெடுவுக்கான காலக்கெடு நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், நாட்டைப் பாதுகாக்கத் தங்கள் உயிரைத் தியாகம் செய்ய ஈரானியர்கள் தயாராக இருப்பதாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ மேலும், தானும் நாட்டுக்காகத் தன்னைத் தியாகம் செய்யத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். “இந்தக் கணம் வரை, 14 மில்லியனுக்கும் அதிகமான […]

நேற்று ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி படையால் (IRGC) சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்தைத் தொடர்ந்து காணாமல் போன அமெரிக்க விமானியைக் கண்டுபிடிப்பதில் அமெரிக்காவும் ஈரானும் காலக்கெடுவுக்குள் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இந்நிலையில், தேடுதல் பணியில் இணையுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ஈரான், வெகுமதியும் வழங்குவதாக உறுதியளித்துள்ளது. நேற்று தாக்ககப்பட்ட இரண்டு விமானங்களில் அமெரிக்காவின் எஃப்-15இ ஸ்ட்ரைக் ஈகிள் (F-15E Strike Eagle) விமானமும் அடங்கும் என்றும், ஒரு படை […]

மத்திய கிழக்கில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதாகவும், அதன் தலைமையும் இராணுவமும் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாகவும் டிரம்ப் கூறிய கருத்துகளை ஈரான் மீண்டும் கடுமையாகச் சாடியது. அமெரிக்கா நிரந்தர அவமானத்தை சந்திக்கும் வரை போர் தொடரும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.. ஈரானின் கடற்படை மற்றும் விமானப்படை கணிசமாக பலவீனமடைந்துள்ளதாகவும், அதன் தலைமை அமைப்பு பெரும் பின்னடைவுகளைச் சந்தித்துள்ளதாகவும் டிரம்ப் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியயதை தொடர்ந்து ஈரானின் இந்த எதிர்வினை வந்தது. […]

நாடாளுமன்றத்தின் தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, ​​திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மக்களவையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்து வரும் மோதலின் முக்கிய அம்சங்களையும், இப்பிரச்சினையில் இந்தியாவின் நிலைப்பாட்டையும் விளக்கினார். அப்போது பேசிய அவர் “ மேற்கு ஆசிய நெருக்கடி தொடங்கி தற்போது மூன்று வாரங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது.. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் உலகம் முழுவதும் பேச்சுவார்த்தை நடத்தி […]

ஈரானின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரான அதன் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி மற்றும் இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படையின் (IRCG) சக்திவாய்ந்த துணை ராணுவத் தன்னார்வப் படையின் தலைவர் குலாம்ரெசா சுலைமானி ஆகியோரை வான்வழித் தாக்குதல்களில் கொன்றதாக இஸ்ரேல் நேற்று தெரிவித்தது.. பிப்ரவரி 28-ம் தேதி அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி தொடங்கின.. ‘ஆபரேஷன் ரோரிங் லயன்’ என்று இஸ்ரேலும், ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ […]

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான தனது தொடர்ச்சியான மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் 3 முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளது.. அவற்றில் தனது உரிமைகளை அங்கீகரிப்பது மற்றும் போரின் போது ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவது ஆகியவை அடங்கும். மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி சர்வதேச சமூகம் ஈரானின் சட்டப்பூர்வமான உரிமைகளை அங்கீகரிப்பதும், எதிர்கால ஆக்கிரமிப்பைத் தடுக்க உறுதியான உத்தரவாதங்களை வழங்குவதும் ஆகும் என்று ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் கூறினார். […]

எல்.பி.ஜி கேஸ் சிலிண்டர் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், நாட்டில் போதுமான அளவில் கேஸ் கையிருப்பு இருப்பதாகவும், உற்பத்தி 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. இந்தியா தற்போது சுமார் 40 நாடுகளில் இருந்து எரிவாயு விநியோகத்தை பெற்றுக்கொண்டு வருகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.. மேலும் முன்பு 55 சதவீதமாக இருந்த ஹார்முஸ் நீரிணைக்கு வெளியிலிருந்து வரும் எரிவாயு இறக்குமதி பங்கு […]

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையே போர் தொடங்கிய பிறகு, வெளிநாடுகளில் செயல்படும் “ஸ்லீப்பர் செல்” குழுக்களை செயல்படுத்த ஈரான் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.. இதற்காக ஒரு “செயல்பாட்டு சிக்னல்” (operational trigger) அனுப்பியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா இடைமறித்த ஒரு குறியாக்கப்பட்ட (encrypted) செய்தியை அடிப்படையாகக் கொண்டு இந்த தகவல் வெளியானதாக கூறப்படுகிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானில் ஒரு வாரத்திற்கும் மேலாக கடுமையான வான்வழி தாக்குதல்களை […]

மத்திய கிழக்கில் போர் மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இன்று மத்திய வெளியுறவு அமைச்சகம் புது டெல்லியில் ஒரு சிறப்பு கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறை, மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா பிராந்தியம் ஆகிய பகுதிகளில் உருவாகி வரும் தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. இது […]

ஈரான் மீது இன்று அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டடு வருகிறது.. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.. ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் குடியிருப்பு அரண்மனை மற்றும் அலுவலகங்களுக்கு அருகில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதல்களை இஸ்ரேல் அறிவித்தது, பின்னர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் பங்கை உறுதிப்படுத்தினார்.. குண்டுகள் “எல்லா இடங்களிலும் வீசப்படும்” என்று எச்சரித்தார். ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருவதால், இஸ்ரேலில் நாடு தழுவிய […]