சென்னை பெசன்ட் நகரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “ஓபிஎஸ் மகன் அமைச்சராவதை தடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அதிமுக கட்சி தொண்டர்களை குழப்ப வேண்டும் என ஓபிஎஸ் பேசியுள்ளார். நாங்கள் தான் அதிமுக கட்சி; நாங்கள் எதற்காக தனிக்கட்சி துவங்க வேண்டும். ஓபிஎஸ் வேண்டும் என்றால் ஓபிஎஸ் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை துவங்கலாம். நாம் ஒருவர் […]