கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இளவரசனாக மக்கள் மனதில் இடம் பிடித்த அவருடைய நடிப்புக்கு தற்போது மார்க்கெட்டும் அதிகரித்து இருக்கிறது. சமீபத்தில் அவர் நடித்த ஒரு கடை விளம்பரத்திற்கு மட்டுமே அவர் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கியதாக சொல்லப்பட்டது. பொன்னியின்செல்வன் 2ம் பாகம், அறைவன், அகிலன் சிரேன் என அடுத்தடுத்து அவர் நடிப்பில் படங்கள் தயாராகி வருகின்றன.

பிரபல நடிகர் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் தான் பிரதீப் ரங்கநாதன்.அந்த திரைப்படத்திற்கு பிறகு சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்த லவ் டுடே திரைப்படத்தின் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்தார். இந்த திரைப்படம் ஆரம்பத்தில் ரசிகர்களிடையே பல விமர்சனங்களை சந்தித்தாலும், முடிவில் மாபெரும் வெற்றியை பெற்றது. அதோடு மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் கதாநாயகனும், இயக்குனருமான பிரதிப் ரங்கநாதனை […]