ஈஸ்டர் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பு, ஐரோப்பா முழுவதும் பயணித்துக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான கிட்கேட் சாக்லேட் பார்கள் கொண்டு செல்லப்பட்ட ஒரு லார திருடப்பட்டுள்ளது. 12 டன்களுக்கும் அதிகமான சாக்லேட் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த லாரி 4 லட்சத்திற்கும் அதிகமான கிட்கேட் பார்களை ஏற்றிச் சென்றதுடன், மத்திய இத்தாலியில் உள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து புறப்பட்டது. மார்ச் 26 அன்று போலந்துக்குச் செல்லும் வழியில் அது திருடப்பட்டது என்று […]

