திருமாலின் 108 திவ்யதேசங்களில் 48-வது தலமாகும் திருப்பாடகம் பாண்டவதூத பெருமாள் கோயில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு ஆன்மிகப் பொக்கிஷமாக விளங்குகிறது. இத்தலத்தில், பாண்டவர்களின் தூதராக கண்ணன் தோன்றிய தருணமே, ஆலயத்தின் முக்கிய தரிசனமாக உள்ளது. இங்கு கிருஷ்ண பகவான், விஸ்வரூப தரிசனம் காட்டி காட்சி தருகிறார். நான்கு நிலை ராஜகோபுரங்களைக் கொண்ட இக்கோவில் பல்லவர்களால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. பிறகு சோழர்கள், விஜயநகர பேரரசர்களாலும் புனரமைக்கப்பட்டதாகவும், குலோத்துங்க சோழன், ராஜ ராஜ […]