சிவப்பு துணியை அசைத்து ரயில் விபத்தைத் தடுத்த மூதாட்டியை ரயில்வே காவல்துறை கௌரவித்துள்ளது. மங்களூருவின் புறநகர் பகுதியான பஞ்சண்டி அருகே உள்ள மந்தாராவில் 70 வயதான சந்திரவதி என்ற மூதாட்டி வசித்து வருகிறார்.. இந்நிலையில் கடந்த வாரம் ரயில் தண்டவாளத்தின் மீது மரம் விழுந்ததைக் கண்ட அவர், உடனடியாக சிவப்பு துணியை அசைத்தார். அதை கவனித்த ரயில் ஓட்டுநர், முன்னெச்சரிக்கையாக, ரயிலின் வேகத்தை குறைத்து, மரத்திற்கு முன்னால் ரயிலை நிறுத்தினார்.. […]