இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் ஆன்லைன் பேமெண்ட்கள் அதிகரித்துள்ளன. டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் அதிகரிப்புடன், இணைய மோசடிகளும் சேர்ந்தே அதிகரித்துள்ளன. மோசடி என்றால் யாராவது உங்களை நேரில் வந்து தான் ஏமாற்ற வேண்டும் என்று நிலை மாறி, தற்போது சைபர் குற்றவாளிகள் ஆன்லைனிலேயே லட்சக்கணக்கில் பணத்தை திருடுகின்றனர்.. எனவே ஆன்லைனில் பண பரிவர்த்தனையை மேற்கொள்ளும் நபர்கள், எப்போதும் எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருக்குமாறு வங்கிகள் அறிவுறுத்தி வருகின்றன. […]