நாமக்கல் மாவட்டத்தில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள முக்குப்பாறை என்ற பகுதியைச் சார்ந்தவர் சுப்பிரமணி. இவர் நேற்று மாலை தனது கரும்பு தோட்டத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது இவரது கரும்பு தோட்டத்தில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த […]