மேற்காசிய போர் நெருக்கடி 4-வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், நாட்டின் தயார்நிலை மற்றும் திட்டங்களை ஆய்வு செய்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி நாளை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் (UT) முதலமைச்சர்களுடன் கலந்துரையாட உள்ளார்.. ‘டீம் இந்தியா’ (Team India) உணர்வின் அடிப்படையில், மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை உறுதி செய்வதில் இந்தக் கூட்டம் முக்கிய கவனம் செலுத்தும். எனினும், சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள மாநிலங்கள், தேர்தல் […]
Middle East conflict
கடந்த மாதம் 28-ம் தேதி இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த தொடங்கின.. இந்த தாக்குதல் ஈரானின் உச்சதலைவர் அயத்துல்லா அலி கமேனி உள்ளிட்ட பல உயர்மட்ட தலைவர்கள் கொல்லப்பட்டனர்.. எனினும் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.. மேலும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதும் ஈரான் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.. அதுமட்டுமின்றி, உலகின் மிகப்பெரிய கப்பல் போக்குவரத்து […]
மேற்கு ஆசியாவில் இஸ்ரேல் – அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடந்து வரும் போரினால் பதற்றம் நீடித்து வருகிறது.. அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது.. இதனால் வளைகுடா நாடுகளிலும் பதற்றம் அதிகரித்தது.. இந்த நிலையில் “தவறான மற்றும் ஜோடிக்கப்பட்ட உள்ளடக்கம்” கொண்டதாகக் கூறப்படும் வீடியோ கிளிப்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டதற்காக ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளால் 35 […]
துபாய் நகரில் வசிக்கும் மக்களுக்கு இன்று பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. “ஏவுகணை தாக்குதல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது” என்று எச்சரிக்கும் அவசர அறிவிப்பு நகரம் முழுவதும் பலரின் மொபைல் போன்களுக்கு அனுப்பப்பட்டது. இந்த எச்சரிக்கை, மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றத்தின் மத்தியில் அறிவிக்கப்பட்டது.. கடந்த சனிக்கிழமை இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்திய நிலையில், ஈரான் அமெரிக்கா இராணுவ தளங்கள் மற்றும் அதன் கூட்டாளிகள் உள்ள வளைகுடா […]
பாபா வாங்காவின் ‘பயங்கரமான கணிப்புகள்’ இஸ்ரேல்-ஈரான் மோதலுக்கு மத்தியில் மீண்டும் எழுந்துள்ளன. சமீபத்திய இராணுவத் தாக்குதல்களுக்குப் பிறகு உலகம் முழுவதும் கவலைகள் அதிகரித்து வருவதால், 2026 இல் ஒரு ‘பெரிய போர்’ பற்றிய கணிப்புகள் யதார்த்தத்தை நோக்கி நகர்கின்றனவா என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். பிப்ரவரி 28 சனிக்கிழமை, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது கூட்டு இராணுவத் தாக்குதலைத் தொடங்கின. தெஹ்ரானில் உள்ள உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் […]
மத்திய கிழக்கில் போர் மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இன்று மத்திய வெளியுறவு அமைச்சகம் புது டெல்லியில் ஒரு சிறப்பு கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறை, மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா பிராந்தியம் ஆகிய பகுதிகளில் உருவாகி வரும் தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. இது […]
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் மனைவி மன்சௌரே கொஜஸ்தே பகெர்சாதே திங்கட்கிழமை உயிரிழந்ததாக, ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தெஹ்ரானில் நடத்திய தாக்குதலில் காயமடைந்த நிலையில் அவர் இன்று மரணமடைந்துள்ளார். 79 வயதான மன்சூரே கொஜஸ்தே பகெர்சாதே, ஈரானின் மஷ்ஹத் நகரில் பிறந்தவர். அவர், ஈரான் அரசின் ஒளிபரப்பு நிறுவனமானஇஸ்லாமிக் குடியரசு ஈரான் ஒலிபரப்பு நிறுவனத்தில் முன்னாள் துணை இயக்குநராக இருந்த […]
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் சூழலில், ஈரான் ஒரு பெரிய படை நடவடிக்கையாக காதர் தொடர் நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை ஏவியுள்ளது. இது, இஸ்ரேல் மீது ஈரான் மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகளில் மிகவும் தீவிரமான கட்டமாக கருதப்படுகிறது. காதர் ஏவுகணை – திறன் மற்றும் முக்கியத்துவம் காதர் ஏவுகணைகள், தொழில்நுட்ப ரீதியாக ஈரானின் Ghadr-110 (காதர்-110) தொடரில் அடங்கும் நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஆகும். […]
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. இந்த அலுவலகம் இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் நகரில் அமைந்துள்ளது. ஆனால், அந்த தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் 76 வயதான பிரதமர் நெதன்யாகு அங்கு இருந்தாரா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. IRGC வெளியிட்டுள்ள அறிக்கையில், “10-ஆவது தாக்குதல் அலையில், ‘கெய்பார் ஷெகான்’ (Kheybar Shekan) என்ற கண்டம் விட்டு […]
இந்தியா முழுவதும் வன்முறை சம்பவங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சுற்றறிக்கை பிப்ரவரி 28 அன்று அனுப்பப்பட்டுள்ளது. இதில், “ஈரானுக்கு ஆதரவான தீவிரவாத போக்குடைய மதபோதகர்கள் தூண்டுதல் உரைகள் நிகழ்த்துகிறார்களா” என்பதை கண்டறிந்து, மாநில அரசுகளும் பாதுகாப்பு அமைப்புகளும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய […]

