ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் மனைவி மன்சௌரே கொஜஸ்தே பகெர்சாதே திங்கட்கிழமை உயிரிழந்ததாக, ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தெஹ்ரானில் நடத்திய தாக்குதலில் காயமடைந்த நிலையில் அவர் இன்று மரணமடைந்துள்ளார். 79 வயதான மன்சூரே கொஜஸ்தே பகெர்சாதே, ஈரானின் மஷ்ஹத் நகரில் பிறந்தவர். அவர், ஈரான் அரசின் ஒளிபரப்பு நிறுவனமானஇஸ்லாமிக் குடியரசு ஈரான் ஒலிபரப்பு நிறுவனத்தில் முன்னாள் துணை இயக்குநராக இருந்த […]
Middle East conflict
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் சூழலில், ஈரான் ஒரு பெரிய படை நடவடிக்கையாக காதர் தொடர் நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை ஏவியுள்ளது. இது, இஸ்ரேல் மீது ஈரான் மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகளில் மிகவும் தீவிரமான கட்டமாக கருதப்படுகிறது. காதர் ஏவுகணை – திறன் மற்றும் முக்கியத்துவம் காதர் ஏவுகணைகள், தொழில்நுட்ப ரீதியாக ஈரானின் Ghadr-110 (காதர்-110) தொடரில் அடங்கும் நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஆகும். […]
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. இந்த அலுவலகம் இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் நகரில் அமைந்துள்ளது. ஆனால், அந்த தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் 76 வயதான பிரதமர் நெதன்யாகு அங்கு இருந்தாரா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. IRGC வெளியிட்டுள்ள அறிக்கையில், “10-ஆவது தாக்குதல் அலையில், ‘கெய்பார் ஷெகான்’ (Kheybar Shekan) என்ற கண்டம் விட்டு […]
இந்தியா முழுவதும் வன்முறை சம்பவங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சுற்றறிக்கை பிப்ரவரி 28 அன்று அனுப்பப்பட்டுள்ளது. இதில், “ஈரானுக்கு ஆதரவான தீவிரவாத போக்குடைய மதபோதகர்கள் தூண்டுதல் உரைகள் நிகழ்த்துகிறார்களா” என்பதை கண்டறிந்து, மாநில அரசுகளும் பாதுகாப்பு அமைப்புகளும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய […]
இஸ்ரேல் உடனான போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து. நாளுக்கு நாள் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இரு நாடுகள் கடும் உயிர் சேதம் ஏற்பட்டது. இதனிடையே ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய 3 அணுமின் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் தற்போதைய மோதல் மேலும் அதிகரித்தது. அமெரிக்காவின் […]
US President Donald Trump has approved attack plans against Iran.
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் போர் தொடங்கிவிட்டது என்று ஈரானின் உச்ச தலைவர் அறிவித்துள்ளார். ஈரான் – இஸ்ரேல் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், போர் தொடங்கிவிட்டதாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “போர் தொடங்குகிறது. அலி தனது சுல்பிகருடன் கைபருக்குத் திரும்புகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார். […]

