தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கரீம் நகராட்சியில் சோபாரி ஜெயஸ்ரீ என்பவர் 13 வது வார்டு பாஜக கவுன்சிலராக இருக்கிறார். இவரது கணவர் வேணுவும் பாஜக நிர்வாகி தான். நேற்று வேணு காரில் பயணம் செய்த போது தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து இருக்கின்றனர். மூணுகோடு பகுதியை நோக்கி அந்தப் பணத்தை குண்டூரில் இருந்து அவர் எடுத்துச் சென்றுள்ளார். […]