திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் செவிலியரின் கவனக்குறைவால் பிறந்த குழந்தை கீழே விழுந்து மரணமடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டிக்கு அருகே உள்ள கிராமத்தைச் சார்ந்தவர் சந்தியா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் பிரசவத்திற்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அப்போது இவருக்கு பணிக்குடம் உடைந்ததால் மேலும் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு இவரை அனுப்பி வைத்தனர். அங்கு சுகப்பிரசவத்தில் இவருக்கு ஆண் குழந்தை […]