தமிழக அரசு வழங்கும் முதியோர்களுக்கான உதவித்தொகை நிறுத்தப்படுவதாக கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பாலபாரதி குற்றம் சாட்டியுள்ளார். தமிழக அரசு சார்பில் முதியோர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை தற்பொழுது தமிழக அரசு நிறுத்த முயற்சித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது . இந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பால பாரதி மதுரையில் மட்டும் 12,000 முதியோர்களின் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். திமுக ஆட்சிக்கு […]
old pension
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்ப கொண்டு வருவது குறித்து பரிசீலித்து வருவதாக மகாராஷ்டிர நிர்வாகம் தற்போது தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஆய்வு செய்து வருவதாகவும், மகாராஷ்டிராவில் ஆசிரியர்கள் மற்றும் பிற அரசு ஊழியர்களுக்கான திட்டத்தை செயல்படுத்துவதில் மாநில அரசு உறுதியாக இருப்பதாகவும் கூறினார். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான முந்தைய ஓய்வூதியத் திட்டம், உதவிபெறாத நிறுவனங்கள், ஆங்கில […]
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து நாடு முழுவதும் பல மாநில அரசு ஆலோசித்து வருகிறது. . நாட்டின் பல மாநிலங்களில் பழைய ஓய்வூதிய முறை அமலில் உள்ளது. இதனால் பல மாநிலங்களில் இன்றும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் இந்த மாதம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் லட்சக்கணக்கான […]
வரும் 12-ந் தேதி ஓய்வூதியதாரர்களுக்கு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது . சென்னை தி.நகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை மத்திய மண்டல அலுவலகம், சிவஞானம் சாலை, சென்னை 600 017 என்ற முகவரியில் 12.01.2023 அன்று காலை 11.00 மணியளவில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஓய்வூதியதாரர்கள் புகார்களை கீழ்கண்ட தபால் நிலையங்களுக்கு தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் Email-dochennaicitycentral@indiapost.gov.in மூலமாகவோ அல்லது […]
ஆயுதப்படைகளின் லட்சக்கணக்கான வீரர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் விதமாக மத்திய அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜூலை 1, 2019 முதல் ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தின் கீழ் ஆயுதப்படை ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களின் ஓய்வூதியத்தை திருத்தியமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவால் 25.13 லட்சத்துக்கும் அதிகமான வீரர்கள் பயனடைவார்கள் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். ஜூலை 01, […]
பஞ்சாப் மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு அமைச்சரவை செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு அமைச்சரவை செயல்படுத்த ஒப்புதல் அளித்தது. இதற்கான அறிவிப்பை வெளியிட மாநில அரசு தயாராகி வருகிறது என்று அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் முதலமைச்சர் மான் தெரிவித்தார். ஒரு வரைவு அறிவிப்பு அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டதாகவும், ஆனால் கூட்டத்தின் அறிக்கைகள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்ட பின்னரே வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . புதிய […]
முதியோர் ஓய்வூதியத் திட்டப் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைக்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் உதவித்தொகை ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியை தேர்தல் சமயத்தில் அள்ளி வீசிய திமுக, ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் கடந்துவிட்டது. இந்நிலையில், இந்த வாக்குறுதியை நிறைவேற்றாததோடு மட்டுமல்லாமல், பயனாளிகளின் எண்ணிக்கையை லட்சக்கணக்கில் குறைத்துள்ளதாக செய்தி வந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, ‘கழுதை தேய்ந்து […]