மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவையில் பேச அனுமதிக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேயின் அலுவலகத்தில் […]

