இருவார கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் இன்று சேலம் மாவட்டத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; ஒவ்வொரு வருடமும் “தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்” இரு வாரங்கள் அனுசரிக்கப்படுகிறது. இம்முகாமின் முக்கிய நோக்கமானது ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கினால் ஏற்படும் மரணத்தை முற்றிலுமாக தவிர்த்தல் ஆகும். இவ்வருடம் இம்முகாமானது இன்று மாலை வரை நடைபெறுகிறது. இம்முகாமில் கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி […]